பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் ஆகியோர் இன்று லண்டனில் சந்தித்தனர்.
சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கான பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும் என இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளதால், கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
இது கனடா மற்றும் பிரித்தானியாவில் கடுமையான பணவீக்கத்தையும், வாழ்வாதாரச் செலவு அதிகரிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நீரிணையை மீண்டும் திறக்க நேட்டோ (NATO) நாடுகள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நிலைமையைச் சமாளிக்கக் கூட்டாகச் செயல்படுவது குறித்து மார்க் கார்னியும் ஸ்டார்மரும் ஆலோசித்தனர்.
பிரித்தானியப் பிரதமருடனான இந்தச் சந்திப்பிற்குப் பிறகு பிரதமர் மார்க் கார்னி, பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரித்தானிய மன்னர் சார்லஸைச் சந்தித்துப் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
