கடந்த வாரம் போர்ச்சுகலின் லிஸ்பனில் நடந்த ஃபியூனிகுலர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒட்டாவாவைச் சேர்ந்த அசிஸ் பென்ஹாரெஃப் என்பவரும் ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
42 வயதான பென்ஹாரெஃப், தனது மனைவி ஹிந்த் இகுர்னானுடன் விடுமுறைக்காக போர்ச்சுகல் சென்றிருந்தபோது இந்த சோகமான விபத்து நடந்துள்ளது.
போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான, மலைச் சரிவில் பயணிக்கும் ஒரு ஃபியூனிகுலர் ரயில், திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
அவர்களில். கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த தம்பதி ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட நிலையில், ஒட்டாவாவைச் சேர்ந்த அசிஸ் பென்ஹாரெஃபும் இந்த விபத்தில் உயிரிழந்ததாக தற்போது உறுதியாகியுள்ளது.
ஒட்டாவாவின் ஆர்லியன்ஸ் பகுதியில் கடந்த ஆறு வருடங்களாக தனது மனைவி மற்றும் மைத்துனருடன் வசித்து வந்த பென்ஹாரெஃப், ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார்.
அவர் சமீபத்தில் கனடாவின் குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
