முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் இவரை ஒரு கோடி ரூபாய் சரீர பிணையில் செல்ல கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம அனுமதி வழங்கினார்.
தனது சட்டத்தரணி ஊடாக டயனா கமகே நீதிமன்றத்தில் இன்று முன்னிலையான போதே, இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
இதன்படி செல்லுபடியற்ற விசாவை வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின் கீழ் டயனா கமகேவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ் வழக்கை கடந்த 07 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, டயனா கமகே நீதிமன்றத்தில் முன்னிலையாகாமையால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
