கனடாவில் அண்மைக்காலமாக தட்டம்மை நோய்த்தொற்று வேகமாக பரவி வருகின்றது.
பியர்சன் விமான நிலையத்தின் முதலாம் இலக்க முனையத்தில் பயணம் செய்த இரண்டு பயணிகள் தட்டம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜுலை மாதம் 30ம் திகதி அதிகாலை 5 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலான காலப் பகுதியில் இரண்டு விமானங்களில் பயணம் செய்த பயணிகளுக்கு தட்டம்மை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தட்டம்மை நோய் அறிகுறிகள் தென்பட்டால் அது குறித்து விசேட கவனம் செலுத்துமாறு குறித்த திகதியில் பயணித்த விமானப் பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த விமான முனைய வலயத்தில் பயணம் செய்த அனைவரும் நோய் அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு கனேடிய சுகாதார தரப்பினர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
