2024 ஆம் ஆண்டுக்கான க.பொ. த உயர்தரப் பரீட்சைகளின் மறுமதிப்பீடு செய்யப்பட்ட பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மறுமதிப்பீடு செய்யப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்ப்பவர்களும், முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் உயர்தரப் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்களும், இன்று முதல் ஓகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நள்ளிரவு வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
