அவுஸ்திரேலியாவின் சிட்னியில் யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரை மடக்கி பிடித்து துணிச்சலாக துப்பாக்கியை பிடுங்கியபோது துப்பாக்கி சூட்டுக்கு இலக்காண அஹமத் அல் அஹமதுவை வைத்தியசாலையில் சந்தித்து அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நலம் விசாரித்துள்ளார்.
மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காக உயிரை பணயம் வைத்த உங்களுக்கு, ஒவ்வொரு அவுஸ்திரேலியர் சார்பாகவும் நன்றி கூறுவதாகவும், நீங்கள் தான் அவுஸ்திரேலியாவின் நாயகன் என்றும் அவரிடம் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்தார்.
குறித்த சம்பவத்தின் போது அஹமது துப்பாக்கியை பிடுங்கவில்லை என்றால் மேலும் பல உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கும். எனவே துணிச்சலை பாராட்டி மக்கள் அவரை ஹீரோ என பட்டம் கொடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி வைத்திருக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதால் தற்போது இந்த கட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்க அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் முடிவு செய்துள்ளார்.
