நியூசிலாந்து அரசு, கனடாவின் காட்டுத்தீயை அணைக்கும் பணிக்கு உதவியாக, மேலும் நான்கு தீயணைப்பு நிபுணர்களை அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது.
கனடாவில் இதுவரை காட்டுத்தீயால் 6 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு நிலம் சாம்பலாகியுள்ளது.
மே மாதம் தொடக்கம் வெவ்வேறு மாகாணங்களில் பரவத் தொடங்கிய இந்த காட்டுத்தீயால், நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
தற்போதும் கனடாவின் வெவ்வேறு பகுதிகளில் 747 காட்டுத்தீ எரிந்து கொண்டு உள்ளன.
New Zealand’s Fire and Emergency (FENZ) அமைப்பின் தகவலின்படி, அவர்கள் Canadian Interagency Forest Fire Centre- அமைப்பிடமிருந்து இருந்து, உதவி கோரும் அதிகாரப்பூர்வ கோரிக்கையைப் பெற்றுள்ளனர்.
இதனடிப்படையில் மூன்று தீயணைப்பு நிபுணர்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டர் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நான்கு தீயணைப்பு வீரர்கள், நியூசிலாந்திலிருந்து கனடாவின் அல்பெர்டா மாகாணத்திற்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
