தலைநகர் ஒட்டாவாவில் கடந்த 30 ஆண்டுகளாகப் போலி அடையாளத்தில் (False Identity) வாழ்ந்து வந்த 68 வயதுடைய முதியவர் ஒருவரை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு கிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் (Rwanda) நடந்த கொடூரமான இனப்படுகொலையில் (Rwandan Genocide) தொடர்புடையவர் எனக் கூறி, சர்வதேசப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுத் தேடப்பட்டு வந்தவர் என்பது விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் மூலமே, அந்த நபர் குறித்து பொலிஸ்துறையினர் அறிந்து கொண்டனர்.
வெளிநாட்டிலிருந்து கனடாவிற்குத் திரும்பிய போது கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது, கனேடியக் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தற்போது 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள நபரின் பெயரைப் பொலிஸார் தற்போது வெளியிட மறுத்துள்ளனர்.
எனினும், அவரது நீண்ட காலப் போலி வாழ்க்கை மற்றும் அவர் பிடிபட்ட விபரங்களை பொலிஸ் திணைக்களம் விரிவாக வெளியிட்டுள்ளது.


