நோவா ஸ்கோஷியாவில், தனது மூன்று குழந்தைகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த 87 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
டக்ளஸ் குத்ரோ சீனியர் (Douglas Guthro Sr.) என்ற அந்த நபரின் குற்றங்கள் “நம்பிக்கையின் அப்பட்டமான மீறல்” என்றும், “அளவிட முடியாத துயரத்தை” ஏற்படுத்தியதாகவும் நீதிபதி ஃபிராங்க் ஹோஸ்கின்ஸ் (Justice Frank Hoskins) தெரிவித்தார்.
பிக்டோ (Pictou) கவுண்டியைச் சேர்ந்த டக்ளஸ் குத்ரோ சீனியர் மீது, பல பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த எட்டு பாலியல் வன்முறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் அந்த ஒப்புக்கொண்டார்.
நோவா ஸ்கோஷியா உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், நீதிபதி ஹோஸ்கின்ஸ், குத்ரோவின் குற்றங்கள் “அதிர்ச்சியளிப்பவை” என்று குறிப்பிட்டார்.
19 ஆண்டுகள் நீடித்த காலப்பகுதியில், தனது மகனையும் இரண்டு மகள்களையும் அவர் தொடர்ச்சியாகத் துஷ்பிரயோகம் செய்ததாக நீதிபதி தெரிவித்தார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் பில் கோர்மன் (Bill Gorman), நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில், “இது ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் முக்கியமான தண்டனை” என்று கூறினார்.
