வெள்ளிக்கிழமை காலை மார்க்கம் (Markham) நகரில் ஒரு வீட்டிற்குள் நுழைந்து பல சந்தேக நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணும் ஒரு நாயும் உயிரிழந்ததுடன் மேலும் ஒரு ஆண் படுகாயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தவர் 20 வயதுடைய நிலக்சி ரகுதாஸ் (Nilakshi Raguthas) எனும் தமிழ்ப்பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் 26 வயது ஆண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறைந்தபட்சம் இரண்டு சந்தேக நபர்களாக இருக்கலாம் எனவும் இது ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் என போலீசார் தெரிவித்துள்ளனர்
மேலும் பொலிஸார் மேலதிக விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை.
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர் towing industry உடன் தொடர்புடைய தொழிலை மேற்கொள்பவர் எனவும் இச்சம்பவமும் அவருடைய தொழிலுடன் தொடர்புபட்டிருக்கலாம் எனும் கோணத்தில் பொலிசார் விசாரணையை மேற்கொண்டு வருவதக்கவும் தெரிவித்துள்ளனர்
கடந்தவருடமும் மார்க்கம்(Markham) நகரிலிருந்து துப்பாக்கிச்சூடு சம்பந்தப்பட்ட பல முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றதாகவும் அதன் பின்னர் தமது புலனாய்வாளர்கள் குறித்த பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வரும் நிலையிலேயே இச்சம்பவமும் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.