அமெரிக்க வரி விதிப்புக்கள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கப்படும் என கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆரம்பித்துள்ள வர்த்தகப் போர், பொருளாதாரத்தை பாதிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கனடா நகராட்சிகளின் கூட்டமைப்பின் ஆண்டு மாநாட்டில் உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“தாமதம் இல்லாமல் திட்டங்களை நிறைவேற்றும் பரிமாணத்திற்கு நாம் நகரப்போகிறோம் என்று உறுதியளித்தார்.
தேசிய முக்கியத்துவமுள்ள உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கும் சட்டமூலத்தை தயாரித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கனடா வளர்ச்சிக்கு தடையாக அல்ல, தூண்டுகோலாக மாறுவோம்,” என்று கார்னி வலியுறுத்தினார். கனடாவின் திறன் வளர்ச்சி பல ஆண்டுகளாக நிசப்தமாய் இருந்தது. இது அரச நிதியை சிரமமாக்கியுள்ளது.
மக்கள் வாழ்க்கைச் செலவுகள் உயர்ந்துள்ளன. சமூக நலத் திட்டங்களின் நிலைத்தன்மை சந்தேகமடைகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஒன்டாரியோ முதலமைச்சர் டக் போர்ட், வரும்
முதல் அமைச்சர்கள் கூட்டத்திற்கு முன் தனது முக்கிய கோரிக்கைகள் பட்டியலை ஒட்டாவாவுக்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது
