முல்லைத்தீவு – குமிழமுனை பகுதியில் ஆலயமொன்றில் உள்ள கிணற்றில் விழுந்து பாடசாலை மாணவிகள் இருவர் உயிரிழந்தனர்.
குறித்த இருவரும் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக ஆலயத்திற்குச் சென்ற போது கிணற்றுக்குள் தவறி, விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக முல்லைத்தீவு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
உயிரிழந்த இருவரும் 15 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
