ஒரு ஒன்ராறியோ மாகாண காவல்துறை அதிகாரியைக் கொன்றதாகவும், மேலும் இருவரைக் காயப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட அலன் பெல்லெப்யூய் மீதான வழக்கில் இறுதி வாதங்கள் தற்போது நடந்து வருகின்றன.
ஒட்டாவாவின் கிழக்கே பௌர்ஜெட் பகுதியில் 2023 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த ஒரு நலன் விசாரிக்கும் காவல் சோதனையின் போதே, இந்த குற்றச் சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவ தினத்தன்று, அதிகாலை நேரத்தில், சார்ஜென்ட் எரிக் மியூல்லரைக் கொன்றதும், கான்ஸ்டபிள் மார்க் லௌசன் மற்றும் ஃபிராங்கோயிஸ் காமாஷை காயப்படுத்தியதும் பெல்லெப்யூய் தான் என்பதை நீதிமன்றம் கேட்டறிந்துள்ளது.
தனது வீட்டிற்குள் நுழைந்தவர்கள் காவல்துறையினர் என்று பெல்லெப்யூய் அறிந்திருந்தாரா என்ற கேள்வியும், மற்றும் துப்பாக்கியால் சுட்டபோது அவரது நோக்கம் என்னவாக இருந்தது என்ற கேள்வியும் இந்த வழக்கின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.
பெல்லெப்யூய் தன் மீது சுமத்தப்பட்ட ஒரு கொலைக் குற்றச்சாட்டையும், இரண்டு கொலை முயற்சி குற்றச்சாட்டுகளையும் மறுத்து வாதிடுகிறார்.
மார்ச் மாதம் தொடங்கிய இந்த வழக்கு, இருமொழித் திறன் கொண்ட உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்றையதினம் பெல்லெப்யூய்யின் வழக்கறிஞர் தனது இறுதி வாதங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
