உலகில் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இன்றையதினம் திபெத் மற்றும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதன்படி திபெத்தில் நில அதிர்வானது 3.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் (NCS) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத்தில் உணரப்பட்ட நில அதிர்வானது பூமிக்கடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம்கொண்டிருந்ததுடன், உயிர் மற்றும் உடைமை சேதம் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை.
மேலும் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற நில அதிர்வானது 4.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், பூமிக்கடியிலிருந்து 150 கிலோ மீற்றர் ஆழத்தில் இவ்வதிர்வானது ஏற்பட்டுள்ளது.
