முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது இன்று இலங்கையில் பல இடங்களில் அனுஷ்டிப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின் படி நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என். ஆனந்த், மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி மாவட்ட செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இலங்கையில் நடந்த ஈழப் போரில் உயிரிழந்த ஈழத் தமிழர்களை நினைவு கூறும் விதமாக இன்று மாலை 6 மணி அளவில் தங்கள் மாவட்ட அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் தினம் அனுஷ்டிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்நிகழ்ச்சி நடத்திய புகைப்படங்களையும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். கட்சி தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள படத்தை தவிர எந்த படத்தையும் பயன்படுத்தக் கூடாது என அவர் கூறியுள்ளார்.
நினைவேந்தல் நிகழ்ச்சியில் எழுப்பப்பட வேண்டிய கோஷங்களும் கட்சித் தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.
