பாதசாரி கடவைகளில் மின் விளக்குகளை பொருத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்ட ஆபத்தான இடங்களில் அமைந்துள்ள பாதசாரி கடவைகளுக்காக மின் விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதற்காக சூரிய மின்கலங்களைப் பயன்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும்
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முகாமைத்துவம் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் கே.சந்திரகுமார தெரிவித்துள்ளார்.
இதனூடாக இரவு நேரங்களில் பாதசாரி கடவைகளில் பயணிப்பவர்களை சாரதிக்கு தௌிவாக அடையாளம் காணமுடியும் என்பதுடன் இதனூடாக ஏற்படும் விபத்துகளைக் குறைத்துக் கொள்ளவும் முடியும் என கே.சந்திரகுமார குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை குருணாகல், காலி மற்றும் கொழும்பு மாவட்டங்களில் 140 பாதசாரி கடவைகளில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
பாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்துகளால் வருடாந்தம் அதிகளவானோர் உயிரிழக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது இவ்வாறான வீதி விபத்துக்களை தடுப்பதற்காவே இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
