அல்பேட்டா மாகாணத்தின் எட்மண்டன் நகரில் ஏறக்குறைய 100 வருட
பழமையான பாடசாலையின் கட்டிடம் இடிக்கப்படவுள்ளது.
அந்த இடத்தில் புதிய பாடசாலைக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு
தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1928 இல் எட்மண்டனில் திறக்கப்பட்டதும் ஆயிரக்கணக்கான
மாணவர்களுக்கு சேவையாற்றியதுமான ஸ்ப்ரூஸ் அவென்யூ
பாடசாலையின் பழைய கட்டிடமே இடித்து அழிக்கப்பட உள்ளது.
114வது அவென்யூ மற்றும் 102வது வீதியில் அமைந்துள்ள இந்த பாடசாலை
தொடர்பில் எட்மண்டன் பொதுப் பாடசாலைகள் சபை, சமூக
உறுப்பினர்களுக்கு அறிவித்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கட்டிடத்தை நவீனமயமாக்க விரும்பிய சில
சமூக உறுப்பினர்கள் இந்த முடிவால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்த பாடசாலை இருந்த இடத்தில் புதிய பாடசாலை கட்டுவதற்காக
மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூற்று ஆய்வின் அடிப்படையிலேயே, இந்த
முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய பாடசாலையின் கட்டுமானப் பணிகள் 2028 ஆம் ஆண்டு ஜனவரிக்குள்
முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
