Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

தனது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக, முறைப்பாட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார் பிள்ளையான்!

மே 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைமைச்சர் சிவநேசதுரை
சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான், உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை
உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு கொலை
செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்
தன்னைக் கைது செய்து தடுத்து வைப்பதற்கு, குற்றப் புலனாய்வுத் துறை
எடுத்த முடிவானது, தனது அடிப்படை உரிமைகளை மீறுவதாக
தீர்ப்பளிக்கக் கோரி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின்
பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின்
பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமால, பதில்
பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சர் மற்றும்
சட்டமா அதிபர் ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக
பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி, தனது கட்சியின் நடவடிக்கையில்
ஈடுபட்டிருந்த போது, ​​குற்றப் புலனாய்வுத் துறையை சேர்ந்த அதிகாரிகள்
குழு, மட்டக்களப்பு பகுதியில் தன்னை கைது செய்ததாக, பிள்ளையான்
இம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

குற்ற புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனக்கு நித்திரை
கொள்வதற்கு போதுமான வசதிகள் இல்லை எனவும் பிள்ளையான்,
தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டத்தரணிகளை அணுகுவதற்கும் போதுமான வசதிகள் தமக்கு
இல்லை எனவும் பிள்ளையான் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தமக்கு நஷ்ட ஈடாக 100 மில்லியன் இலங்கை ரூபாய்களைப்
பெற்றுத் தர வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி இடித்து அழிக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க 100 வருட பழமையான கட்டடம் !
அடுத்த செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 16 மே 2025

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

வாகரையில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் 4 பேர் கைது

ஜனவரி 29, 2026
இலங்கை

லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகத்தர்கள் மூவர் கைது

ஆகஸ்ட் 31, 2025
இலங்கை

யாழில். மயக்கமருந்து தெளித்து 12 பவுண் நகைகள் கொள்ளை.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன காலமானார்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?