கியூபெக் மாகாணத்தின் டெர்ரெபோன் பகுதியில், இடைத்தேர்தல்
நடத்துவதற்கு உத்தரவிடுமாறு கோரி, கியூபெக் உயர் நீதிமன்றத்தில் மனுத்
தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அண்மையில் நடைபெற்ற கனேடியப் பொதுத் தேர்தலில், டெர்ரெபோன்
தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில், லிபரல் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில், ஐந்து சிக்கலான தபால் வாக்குச் சீட்டுகளைக் காரணம்
காட்டி, இடைத்தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு உத்தரவிடுமாறு, பிளாக்
கியூபெகுவா கட்சி கோரிக்கை மனுத் தாக்கல் செய்துள்ளது.
டெர்ரெபோன் தேர்தல் தொகுதியில் பதிவான வாக்குகளை முதலில்
எண்ணிய போது, 35 வாக்குகள் வித்தியாசத்தில் லிபரல் கட்சி வெற்றி
பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர், வாக்குகள் மீளவும் எண்ணபட்டு சரிபார்க்கும் செயன்முறை
மேற்கொள்ளப்பட்ட போது, 44 வாக்குகள் வித்தியாசத்தில் பிளாக்
கியூபெகுவா வெற்றி பெற்றது எனத் தெரியவந்தது.
எனினும், இறுதியாக நீதிமன்ற உத்தரவின் மீதான மறு வாக்கு
எண்ணிக்கையின் போது, லிபரல் கட்சியினர் ஒரு வாக்கு வித்தியாசத்தில்
வெற்றி பெற்றனர்.
இதேவேளை, டெர்ரெபோன் மக்களுக்கு சட்டப்பூர்வமான நாடாளுமன்ற
உறுப்பினர் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை பிளாக்
கியூபெகுவா வேட்பாளர் Nathalie Sinclair-Desgagné வலியுறுத்தியுள்ளமை
குறிப்பிடத் தக்கது.
