கியூபெக் மாகாண அரசாங்கத்திற்கும் விசேட வைத்திய நிபுணர்களுக்கும் இடையே புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பான ஆரம்பகட்ட இணக்கப்பாடு இன்று எட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வந்த கசப்பான தொழிற்சங்கப் போராட்டங்கள் முடிவுக்கு வந்துள்ளதோடு, வைத்தியர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளும் உடனடியாக வாபஸ் பெறப்பட்டுள்ளன.
கியூபெக் மாகாணத்தின் புதிய முதலமைச்சர் கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette) இந்த மகிழ்ச்சியான செய்தியை உறுதிப்படுத்தினார்.
ஒப்பந்தம் எட்டப்பட்டதைத் தொடர்ந்து, மேலதிகப் பணிகளைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளை வைத்தியர்கள் கைவிட்டுள்ளதாக ‘கியூபெக் விசேட வைத்தியர்கள் கூட்டமைப்பு’ (FMSQ) தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் பழைய ஒப்பந்தம் காலாவதியான நிலையில், சம்பள உயர்வு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் தொடர்பாக ‘கியூபெக் மாகாண அரசுத் தரப்பினருக்கும் வைத்தியர்களுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வந்தது.
வைத்தியர்களின் சம்பளத்தை அவர்களது செயல்திறனுடன் (Performance) இணைப்பதற்கு, ‘கியூபெக் அரசு முயன்றமை தொடர்பில் வைத்தியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் அனைத்தும், தற்போது முடிவுக்குக் கொண்டுவரப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
