Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

நாமலின் எதிர்ப்பு, நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவம் என கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் தெரிவிப்பு

மே 15, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பதானது, அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் எனக் கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.

குறித்த நினைவுத்தூபிக்கு எதிர்ப்பை வெளியிட்டு தமது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை இட்டிருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டங்களில் இலங்கையின் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக எந்த இனப்படுகொலையும் நிரூபிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், தவறான இனப்படுகொலை கதையைக் கனடா ஊக்குவிப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் எக்ஸ் பதிவைச் சுட்டிக்காட்டியுள்ள கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன், தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான ராஜபக்ச குடும்பத்தின் எதிர்ப்பு, சரியான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞையாகும் என்று பதிவிட்டுள்ளார்.

ராஜபக்ச குடும்பம் இனப்படுகொலை இடம்பெறவில்லை என உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தால் நீதியைக் குழப்புவதற்கான நடவடிக்கைகள், வழக்கு விசாரணையிலிருந்து மறைந்திருத்தல் போன்றவற்றைக் கைவிட்டு சர்வதேச விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த குடும்பம் பொறுப்புக்கூறலை எதிர்கொள்வதற்குப் பதிலாக இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்ட நிலையில், ஆடம்பரத்தில் மறைந்துள்ளது என்றும் கனடாவின் பிரம்டன் நகர முதல்வர் பெட்ரிக் பிரவுன் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி காசாவில் இஸ்ரேல் உணவுப் பற்றாக்குறையை “ஒரு அரசியல் கருவியாக” பயன்படுத்துகின்றது – அனிதா ஆனந்த்
அடுத்த செய்தி காவல்துறையின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள முன்னாள் காவல்துறை அதிகாரி எலெனோர் ஸ்டர்கோ…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

Quebec Tamil fest-2025

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

லிபரல் வெற்றி பெறவேண்டுமென டொனால்ட் ட்ரம்ப் நினைக்கின்றார் -பியர் பொலிவேர்!

மார்ச் 28, 2025
உலகம்முதன்மை செய்தி

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி !

டிசம்பர் 29, 2024
இலங்கைமுதன்மை செய்தி

பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக ப.சத்தியலிங்கம் நியமனம்…..

பிப்ரவரி 27, 2025
அண்மைய செய்திகள்கனடா

தமிழ் பெண்கள் சமூகம் – கியூபெக் அமைப்பின் ஏற்பாட்டில் அக்கினி பெண்ணே நிகழ்வு இன்று….

மார்ச் 8, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?