பிரிட்டிஷ் கொலம்பியா கன்சர்வேட்டிவ் கட்சியின் சட்டசபை உறுப்பினரும் முன்னாள் காவல்துறை அதிகாரியுமான எலெனோர் ஸ்டர்கோ, காவல்துறையின் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கத் தரவுகளைக் கசிய விட்டமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த ஆவணங்கள், பரிந்துரைக்கப்பட்ட பல ஓபியாய்டு மருந்துகள் உரிய நோயாளிகளைச் சென்றடையவில்லை என்பதையும், அதற்குப் பதிலாக அவை கனடா மற்றும் சர்வதேச அளவில் சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன என்பதையும் காட்டின.
திருமதி ஸ்டர்கோ தகவல்களை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே, பிரிட்டிஷ் கொலம்பியா சுகாதார அமைச்சர் ஜோஸி ஒஸ்போர்ன் பாதுகாப்பான விநியோகத் திட்டம் கணிசமாக மாற்றியமைக்கப்படும் என்று அறிவித்தார்.
தற்போது, மருந்துகள் சட்டவிரோதமாக விற்கப்படுவதைத் தடுக்க நோயாளிகள் மருந்தாளரின் முன்னிலையில் தங்கள் பரிந்துரைக்கப்பட்ட ஓபியாய்டுகளை உட்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
