நாடு முழுவதும் நிலவும் மருத்துவர்களுக்கான கடும் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக, நாட்டுக்குள் தற்போது பணிபுரிபவர்களும் வெளிநாடுகளில் பயிற்சி பெற்றவர்களுமான மருத்துவர்களுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்குவதற்கான புதிய, பிரத்யேக விரைவுப் பாதையை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது.
குடிவரவு அமைச்சர் லீனா மெட்லெஜ் டியாப் (Lena Metlege Diab), இந்த புதிய நடவடிக்கை ஆனது, தெளிவான குடியுரிமை வழியை உருவாக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்துடன், உரிமம் பெற்ற மருத்துவர்களை, நாட்டின் மாகாண அரசுகள் பரிந்துரைப்பதற்காகவென 5,000 நிரந்தர வதிவுரிமை இடங்களை மத்திய அரசாங்கம் ஒதுக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் குறிப்பாக, பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்கள், மற்றும் சிறப்பு மருத்துவர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த மருத்துவர்களுக்கு நிரந்தர வதிவுரிமை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


