ஒட்டாவா நகரின் பேருந்து சேவையில் வரும் ஏப்ரல் 27 ஆம் திகதி முதல் மிகப் பெரிய மாற்றம் செய்யப்படவுள்ளது.
“புதிய பேருந்து வழிகள்” என்று அழைக்கப்படும் இந்த மாற்றத்தால், ஏறக்குறைய அனைத்து பேருந்து வழித்தடங்களும் மாற்றியமைக்கப்பட உள்ளன.
இந்த மாற்றத்தால், பயண நேரம் குறையும் என்பதால் சில பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆனால், பல பயணிகள் தாங்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்ல ஒன்றுக்கு மேற்பட்ட பேருந்துகளில் மாறிச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் குழப்பம் அடைந்துள்ளனர்.
“இது நகரத்தின் வரலாற்றில் மிகப்பெரிய பேருந்து சேவை மாற்றம்” என்று ஒட்டாவா நகரத்தின் பேருந்து சேவை நிர்வாகம், கூறியுள்ளது.
மொத்தமுள்ள பேருந்து வழித்தடங்களில் 27 வழித்தடங்கள் மட்டுமே மாறாமல் இருக்கும் என்றும், 100-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
