3D அச்சிடும் தொழில்நுட்பத்தில் உருவாக்கக்கூடிய வெடிப்பு ஆயுதங்கள் குறித்த தரவுகளை வைத்திருந்த கியூபெக் மாகாண வாசியொருவர் மீது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கனேடிய எல்லைச்சேவை முகவரகமே இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
25 வயதை உடைய Alexis Savard மீதே இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர் Shawinigan நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் அது சார் தரவுகளை வைத்திருத்தல் மற்றும் இறக்குமதி செய்தல் என்ற குற்றவகையின் கீழ், இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
எனினும் குறித்த குற்றத்தை சந்தேகநபர் புரிந்துள்ளார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
