கனடாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்களும் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றன.
இதேவேளை மொன்றியலில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் மார்க் கார்னி பேசும்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான தனது காலை தொலைபேசி உரையாடல் “கணிசமான இணக்கபாடுகளுடன் இருந்ததாக பிரதமர் மார்க் கார்னி தெரிவித்தார்.
இதேவேளை தனிப்பட்ட சந்திப்பின் போது டிரம்ப் ‘நமது நாட்டின் இறையாண்மையை மதித்தார்’ என்று மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
மேலும் புதிய பொருளாதார, பாதுகாப்பு உறவு குறித்து “விரிவான பேச்சுவார்த்தைகளை” தொடங்க இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாக மார்க் கார்னி தெரிவித்தார்
தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் துறைமுகம், ரயில் உள்கட்டமைப்பை உருவாக்க $5 பில்லியன் வர்த்தக பல்வகைப்படுத்தல் நிதி ஒதுக்கப்படுவதாகவும் மார்க் கார்னி உறுதியளித்தார்.
மேலும் ஏர் ஃபோர்ஸ் வண்ணில் பேசிய டிரம்ப், “எப்போதும் கனடாவை நேசிப்பதாகக்”தெரிவித்துள்ளார் , மேலும் மார்க் கார்னியுடனான தனது சந்திப்பு “மிகவும் சிறப்பானது ” எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.