இன்று முதல் கனடா பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தினார்
கனடாவிற்கோ ‘மெக்சிகோவிற்கோ ஒப்பந்தம் செய்ய இடமில்லை’ எனவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால அச்சுறுத்தலான வர்த்தகப் போர் இன்று நடைமுறைக்கு வரும் கனடிய பொருட்களுக்கான வரிகளுடன் ஆரம்பிக்கிறது எனவும் அவற்றைத் தடுக்க கனடாவால் எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் சந்தித்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா “பல ஆண்டுகளாக ஒரு கேலிப் பொருளாக” இருந்து வருகிறது எனவும் அதன் அண்டை நாடுகளுக்கு எதிராக வர்த்தக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார் .
எல்லையில் கடுமையான நடவடிக்கை ஏற்கனவே பலன்களைத் தருவதாக தரவுகள் காட்டினாலும், போதைப்பொருள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான மெத்தனமான அணுகுமுறைக்காக கனடாவை தண்டிக்க விரும்புவதாக அமெரிக்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
வரிகளை நிறுத்தி வைக்க கனடா ஏதாவது செய்ய முடியுமா என அமெரிக்கா அதிபரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ,அமெரிக்கா அதிபர் ” கனடாவிற்கும் மெக்சிகோவிற்கும் இடமில்லை. அவர்களுக்கான வரிகள் அனைத்தும் தயாராக உள்ளன, அவை நாளை அமலுக்கு வருகின்றன.”என பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.