ரொறன்ரோ நகரில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குடியேறி ஐந்து ஆண்டுகளில் பின்னர் குடியேறிகள் அங்கிருந்து வெளியேற தொடங்குவது அதிகரித்துள்ளது என
அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ரொறன்ரோ, மொன்றியல் மற்றும் வான்கூவார் பகுதிகளில் இருக்கும் குடியேறிகள் வெளியேறும் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டுச் செலவு அதிகரிப்பு காரணமாகவே பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் ரொறன்ரோவை விட்டு வேறு பகுதிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.