கடந்த அரசாங்கங்களின் போது இலங்கைக்கு வந்த தென் கொரிய மற்றும் அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களிடம் முன்னாள் அமைச்சர்கள் கப்பம் கோரியதன் காரணமாக இலங்கையில் தமது முதலீடுகளை அவர்கள் கைவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதற்கமைய, அந்த முதலீடுகள் இந்தியாவிற்கும் வியட்நாமிற்கும் கொண்டு செல்லப்பட்டதாக, இலங்கைக்கான தென்கொரிய மற்றும் அவுஸ்திரேலிய தூதுவர்கள் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக முறையிட்டதாக தெரியவந்துள்ளது.
அண்மையில் அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்த தென்கொரிய தூதுவர் மியோன் லீ மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீவன் ஆகியோர் இந்த முறைப்பாடுகளை முன்வைத்தனர்.