2021 ஆம் ஆண்டிலிருந்து ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான் ஆட்சியில் இஸ்லாம் மதத்தின் ஷரியத் சட்டத்தின் பெயரால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகின்றன.பொது இடங்களில் நடமாடுவது,பண்டிகை கொண்டாட்டங்கள் ,ஆண்கள் சவரம் செய்வது வரை அனைத்திற்கும் விதிகள் உள்ளன.
பெண்களுக்கு உடை சுதந்திரம்,கல்வி,சமூக வாழ்க்கை என அனைத்தும் மறுக்கப்பட்ட அவலமான சூழலே அங்கு நிலவுகிறது. 2021 அதிகாரத்துக்கு வந்த பின்னர் தலைநகர் காபூலில் உள்ள மகளிர் அமைச்சகம் அறநெறி அமைச்சகமாக மாற்றப்பட்டது. இதன் மேற்பார்வையிலேயே மேற்கூறிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த அறநெறி அமைச்சகம் தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.
அதாவது, உயிருள்ள அசையும் எந்தவொரு புகைப்படங்களையும் செய்தி ஊடகங்களில் வெளியிடக்கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளது.தாலிபான் சட்டப்பிரிவு 17 இந்த படி உயிருள்ளவற்றின் புகைப்படஙகள் ஊடகங்களில் காட்டப்படுவது தடை செய்யப்படுகிறது.
இந்த விதியை பல்வேறு இடங்களில் ஆப்கானிஸ்தானில் தழுப்பான் கட்டுப்பாட்டு ஊடகங்கள் செயல்படுத்த தொடகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மனிதர்களின் புகைப்படங்கள் இல்லாமல் எவ்வாறு செய்தி வெளியிடுவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.ஆனாலும் இந்த விதியை தீவிரமாக கடைப்பிடிக்க செய்தியாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.