வடக்கு கடல் பகுதியில் 322 கிலோ 860 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற 02 படகுகளுடன் 04 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை கடற்பரப்பில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையின் மதிப்பு 129 மில்லியன் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 முதல் 49 வயதுக்குட்பட்ட பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்களும் , சந்தேக நபர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
