எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஆங்கில மொழிமூலமான தொலைக்காட்சி விவாதத்தில் நேருக்கு நேர் விவாதிபோட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்கள் வீடு வீடாகச் சென்று அவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கனடா-அமெரிக்க வர்த்தகப் போர் குறித்து மக்கள் கவலை தெரிவிப்பதாக அந்த வேட்பாளர்கள் கூறுகின்றனர். இந்தத் தொகுதியின் தற்போதைய கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினரை வீழ்த்த போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் இந்தத் தகவலைத் தெரிவித்தனர்.
2015 ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர் ஜியாட் அபௌல்டீஃப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதி இதுவாகும். அங்கு மக்களை நேரடியாகச் சந்தித்த, புதிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் லெஸ்லி தாம்சன், லிபரல் கட்சி வேட்பாளர் பிளேர்-மேரி கோல்ஸ் மற்றும் கனடா மக்கள் கட்சியின் வேட்பாளர் ராபர்ட் பார்ட் ஆகியோர், எட்மண்டன் மானிங் வாக்காளர்களிடையே விலைவாசி உயர்வு ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளதென்று கூறினர்.


