இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். சர்வதேச நியமங்களுக்கு அமைவாக செயற்படுவது என்பது நாட்டுக்கு இழைக்கின்ற துரோகமாகாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மீண்டும் இலங்கைக்கு வழங்கப்பட்டது.
இச்சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்கு இலங்கை மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சிறந்த ஆட்சியியல் நிர்வாகம் என்பன உள்ளடங்கலாகப் பல்வேற விடயங்கள் தொடர்பான 27 சர்வதேச பிரகடனங்களுக்கு அமைவாக செயற்படவேண்டும் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.