கனேடியர்கள் அதிக வேலைசெய்தும் குறைவான வருமானத்தினை பெற்றுக்கொள்கின்றனர் என கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொலிவேர் (Pierre Poilievre) குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்குப் பொறுப்பு லிபரல் அரசு பொறுப்பு சொல்ல வேண்டுமென தெரிவித்துள்ளார். எனவே மாற்றம் அவசியமாகியுள்ளது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மார்க் கார்னியின் (Mark Carney) அரசாங்கம் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் மட்டுமே ஆதரவளிக்கிறது எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று, புதிய கன்சர்வேடிவ் அரசு கனேடியர்களின் வரிப்பணியை முன்னிலையில் வைத்தே செயல்படும்” என பொய்லிவ்ரே அறிவித்துள்ளார்.
மேலும், “ஒவ்வொரு கனேடியரும் வரி செலுத்துகிறார்கள், எனவே அனைவரும் பணம் சேமிக்க முடியும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் கனடாவை வலுப்படுத்தும், எனவும் மேலும் அமெரிக்காவின் பொருளாதார அழுத்தங்களுக்கு எதிராக நம் நாட்டை நிலைத்திருக்க செய்யும்,” எனவும் கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொலிவேர் குறிப்பிட்டார்.
