மனிடோபா மாகாணத்தில் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருவதால், பல சமூகங்கள் மிகுந்த அபாய நிலையில் உள்ளன.
கட்டுக்கடங்காத காட்டுத்தீயொன்று கார்டன் ஹில் (Garden Hill) பழங்குடி சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது.
அதேவேளை, ஸ்னோ லேக் (Snow Lake) நகரத்திற்கு நேற்று புதன்கிழமை இரவு கட்டாய வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வறண்ட காலநிலை மற்றும் மாறிவரும் காற்றின் திசை காரணமாக தீ மேலும் தீவிரமடைந்து வருவதால், மேலதிக வெளியேற்றங்கள் குறித்த அச்சங்கள் எழுந்துள்ளன.
இப் பகுதியில் பரவி வரும் காட்டுத்தீ புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி சுமார் 52 ஹெக்டேயர் பரப்பளவில் எரிந்து கொண்டுள்ளதுடன், இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
