Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கைமுதன்மை செய்தி

போர் முடிவுற்று 16 ஆண்டுகள் நிறைவு – வடக்கு,கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று

மே 18, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் மூன்று தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழர் பகுதிகளில் இன்றைய தினம் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த மக்களுக்காக நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது

அதற்கமைய பிரதான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது.

காலை 10.15 அளவில் முள்ளிவாய்க்கால் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டு, 10.29க்கு மணி ஒலி எழுப்பப்பட்டது.

இதனையடுத்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், அதன் பின்னர் நினைவேந்தலில் பங்கேற்றவர்களால் தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரதான நினைவேந்தல் நிகழ்வுக்கு முன்னதாக இன்று காலை 6.30 முதல் முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரையில், இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக பிதிர்க்கடன் செலுத்தப்பட்டது.

அத்துடன் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்காக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டோர் இன்று காலை நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அதேநேரம், மன்னார் பஜார் பகுதியிலும் இன்றைய தினம் காலை 9 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன் போது இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது

இதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும் பகிரப்பட்டது

இந்த நினைவேந்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இறுதி யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்குத் தீபச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்

முந்தைய செய்தி AI செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்தார் அசாம் முதல்வர்
அடுத்த செய்தி கண்ணீர் மழையில் முள்ளிவாய்க்கால் முற்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

Quebec Tamil fest-2025

Riverside Rhythms 2025 – Vaudreuil-Dorion

திருக்குறள் விழா -2025

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளம் – முத்துஐயன்கட்டு

பிப்ரவரி 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தலைமன்னார் ஊடாக தமிழகம் தப்பி செல்ல முற்பட்ட நபர்கள் கைது!

ஜூன் 22, 2025
இலங்கை

வெற்று கிருமி நாசினிகளின் போத்தல்களை கொள்வனவு செய்யும் வேலை திட்டம்.

பிப்ரவரி 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கூடிய ஆசனங்களை பெற்றவர்களுக்கு ஆதரவு – வவுனியாவில் உடன்பாடு…

மே 15, 2025
Follow US
© 2025 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?