Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

மொன்றியல் யூதப்பாடசாலை துப்பாக்கிச் சூடு: குற்றவாளிக்கு 5½ ஆண்டுகள் சிறை

செப்டம்பர் 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் உள்ள யூதப் பாடசாலை ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட வழக்கில் கைதான வாலிபர் ஒருவர், மொன்றியல் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து, அவருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பரிந்துரைத்துள்ளனர்.

மொன்றியலின் கோட்-டெ-நெஜ் (Côte-des-Neiges) பகுதியில் அமைந்துள்ள ‘யெஷிவா கெடோலா’ (Yeshiva Gedola) என்ற யூதப் பாடசாலையை இலக்கு வைத்து 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றன.

இதில் 2023 நவம்பர் மாதம் 12-ஆம் திகதி அதிகாலை வேளையில் திருடப்பட்ட வாகனம் ஒன்றில் வந்து, பாடசாலைக் கட்டடத்தை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்த வழக்கில் 21 வயதான அப்திராசாக் மஹ்தி அகமட் (Abdirazak Mahdi Ahmed) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மொன்றியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பிரதிவாதியான அப்திராசாக் மஹ்தி அகமட் தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

பாடசாலைக்குள் ஆட்கள் இருக்கக்கூடும் என்பதை அறிந்தும் அலட்சியமாகத் துப்பாக்கியைப் பயன்படுத்தியமை, திருடப்பட்ட வாகனத்தை வைத்திருந்தமை மற்றும் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நிலையில் நீதிமன்றக் கட்டளைகளை மீறியமை உள்ளிட்ட முக்கிய குற்றச்சாட்டுகளை அவர் ஏற்றுக்கொண்டார்.

வழக்கு விசாரணைகளின் போது மேற்கொள்ளப்பட்ட கூட்டுப் பரிந்துரையின் அடிப்படையில், தண்டனைக் காலத்தைக் கணக்கிட்டு, நீதிமன்றம் விரைவில் தனது இறுதித் தீர்ப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய செய்தி மொண்ட்ரியலில் வாகனத் திருட்டுகள் குறைவு – ஆண்டறிக்கையில் தகவல்
அடுத்த செய்தி ட்ரோன் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கனடாவிற்கு வருகை தந்த உக்ரைன் அதிபர்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக்கின் புதிய சுகாதார அமைச்சராக சோனியா பெலாஞ்சர் நியமனம்

டிசம்பர் 20, 2025
கியூபெக்

மொன்றியல் ஜாக் கார்டியர் பாலத்தில் அதிவேகமாக கார் ஓட்டிய இளம்பெண்

மே 4, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் வாரயிறுதியில் இடம்பெற்ற தொடர் வீதி விபத்துக்களில் 8 பேர் உயிரிழப்பு

ஜூலை 21, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக் மாகாண அரசு, குறைந்தபட்ச பெட்ரோல் விலையை ரத்து செய்யத் திட்டமிட்டுள்ளது!

ஏப்ரல் 15, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?