மொன்றியலின் ஜாக் கார்டியர் (Jacques Cartier) பாலத்தில், நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட 106 கி.மீ அதிவேகமாக கார் ஓட்டிய 18 வயது இளம்பெண் ஒருவருக்கு 2,700 டொலர்களுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பாலத்தில் மணிக்கு 50 கி.மீ மட்டுமே வேகம் செல்ல அனுமதி உள்ள நிலையில், அந்த இளம்பெண் தனது காரை மணிக்கு 156 கி.மீ வேகத்தில் செலுத்தியது கண்டறியப்பட்டது.
அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட 106 கி.மீ கூடுதலாகச் சென்றுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தைச் செலுத்திய வேளையில் அந்தப் பெண் மது அருந்தியிருந்ததும் சோதனையில் உறுதியானது.
உடனடியாக அவரது ஓட்டுநர் உரிமம் 90 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டதுடன், அவர் ஓட்டி வந்த காரும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
கியூபெக் சட்டப்படி, 22 வயதுக்குட்பட்ட ஓட்டுநர்கள் சிறிதளவு மது அருந்தியிருந்தாலும் அது குற்றமாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
