திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட பொதுமக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யவும், அமராவதி ஆற்றுப் படுகையில் உள்ள நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் அமராவதி அணையில் இருந்து நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
எல்-நினோ பாதிப்பு காரணமாகப் போதிய மழைப் பொழிவு இல்லாத சூழலில், மக்களின் குடிநீர் அத்தியாவசியத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசு வெளியீடு தெரிவித்துள்ள தகவலின்படி, ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 07 வரை 8 நாட்களுக்கு அமராவதி அணையின் ஆற்று மதகு வழியாக நாளொன்றுக்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
மேலும், வரும் நாட்களில் போதிய மழைப்பொழிவு ஏற்பட்டு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அணையின் நீர் இருப்பு மற்றும் வரத்தைப் பொறுத்து கூடுதலாக 4 நாட்களுக்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதம் நீர் திறப்பை நீட்டிக்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

