வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்த நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது.
இன்று பிற்பகல் மீன்பிடி அலகின் பணிப்பாளர் அருளானந்தம் சீராளன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்து கொண்டார்.
நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சண்முகராஜா சிவஸ்ரீ ,கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர்
.சுப்பிரமணியம் முரளிதரன் கலந்து கொண்டனர்.குறித்த உணவுக்கண்காட்சியானது நாளையும் நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வின் போது மீனவர் சங்கங்களுக்கான மீன்பிடி உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன

