Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயதுடைய மீனவர்

ஆகஸ்ட் 1, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி மீன்பிடி துறையில் இருந்து கடந்த வியாழக்கிழமை 30 ஆம் திகதி மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் இன்று (1) சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட மீனவர் காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி மீன்பிடி துறையில் இருந்து கடந்த வியாழக்கிழமை 30 ஆம் திகதி மீன் பிடிக்க கண்ணாடியிழை படகில் சென்ற இரு மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான வலையை கடலில் பாய்ச்சி விட்டு கரைக்கு திரும்பிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது.

இதன் போது குறித்த படகில் எரிபொருள் முடிந்ததன் காரணமாக எரி பொருளை எடுத்து வரலாம் என்னும் நோக்கில் குறித்த மீனவர் கடலில் குதித்து நீந்தி கரை சேருவதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் பலத்த காற்றின் காரணமாக அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் 30 ஆம் திகதி வியாழன் மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த சந்தர்ப்பத்தில் காட்ட ஆஸ்பத்திரி பகுதியில் இருந்து தொழிலுக்குச் சென்ற சக மீனவர்கள் கடலில் தத்தளித்து நின்றதாக கூறப்படுகின்ற குறித்த படகையும் மீனவரையும் மீட்டு கரைக்கு வந்துள்ளனர்.

மேலும் எரி பொருளை பெற்றுக் கொண்டு வருவதாக கூறி கடலில் நீந்திச் சென்ற நிலையில் காணாமல் போன சக மீனவரையும் தேடியுள்ளனர்.

காணாமல் போன மீனவர் தொடர்பாக எவ்வித தகவலும் தெரியாத நிலையில் எருக்கலம் பிட்டி மீனவர்கள் இன்று சனிக்கிழமை (1) காலை கடலில் சடலம் ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து காட்டாஸ்பத்திரி மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குறித்த தகவல்களுக்கு அமைவாக காட்டாஸ்பத்திரி மீனவர்கள் தேடிச்சென்று குறித்த சடலத்தை மீட்டதுடன் பேசாலை பொலிசாருக்கு தகவல் வழங்கி குறித்த சடலத்தை கரைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிய வருகிறது.

இதையடுத்து மீட்கப்பட்ட சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி யாழ் பிரதான தபால் நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர்
அடுத்த செய்தி வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் “மகாவித்தியன்ஸ் நாள் – 2026”

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இளைஞனுக்கு “கசிப்பு சிக்” சிறைச்சாலை நிர்வாகம் கண்டு பிடித்த புதுவகையான நோய்(Video)

டிசம்பர் 10, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

ஒட்டுசுட்டானில் வீடுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்த அமைச்சர் Dr.சுசில் ரணசிங்க

ஜூலை 18, 2026
இலங்கை

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி!

செப்டம்பர் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு

நவம்பர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?