Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை வழங்க தீர்மானம்

ஜூன் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பெண்களுக்கு ஏற்படும் மூளைக் காயங்களை கண்டறிந்து, அவர்களை மனநல மற்றும் நரம்பியல் நிபுணர்களிடம் அனுப்பி வைக்கும் புதிய மருத்துவக் கட்டமைப்பு, கியூபெக் மாகாணத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நெருங்கிய துணைவர்களால் (Intimate Partner Violence) வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்களுக்கு ஏற்படும் தீவிர மூளைக் காயங்கள் மற்றும் பாதிப்புகள் பல ஆண்டுகளாகக் கண்டறியப்படாமலும், முறையான சிகிச்சையளிக்கப்படாமலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாகப் பாதுகாப்பு அமைப்புகளும் மருத்துவர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.

குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் கனேடியப் பெண்களுக்குத் தலை மற்றும் உடலின் மேல் பாகங்களில் ஏற்படும் கடுமையான தாக்குதல்களால் Traumatic Brain Injury – eன்று அழைக்கப்படும் தீவிர மூளைக் காயம் ஏற்படுவது மிகச் சாதாரணமாகக் காணப்படுகிறது.

கனடா புள்ளிவிபரத் திணைக்களத்தின் (Statistics Canada) அண்மைக்காலப் பொதுப் பாதுகாப்பு ஆய்வறிக்கையின்படி, குடும்ப
வன்முறைக்குள்ளானவர்களில் 8,600 பேர் கடுமையான மூளை அதிர்ச்சி (Concussion) அல்லது தலைக் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்

இச்சவாலை எதிர்கொள்ள, மொன்றியல் நகரத்தில் உள்ள வெஸ்ட் ஐலண்ட் மகளிர் காப்பகத்தின் (West Island Womens Shelter) இயக்குநர் கைலெய்ன் சிமார்ட் (Guylaine Simard) என்பவர், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொன்றியல் பொலிஸாருடன் இணைந்து ஒரு கூட்டுப் பாதுகாப்பு அமைப்பை (Alliance MH2) உருவாக்கியுள்ளார்.

இதன் மூலம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படும் மூளைக் காயங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவர்களை மனநல மற்றும் நரம்பியல் நிபுணர்களிடம் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கும் புதிய மருத்துவக் கட்டமைப்பு கியூபெக்கில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கிங்ஸ்டன் மாநகர சபை விரிவுபடுத்தியுள்ள புதிய மனிதாபிமான திட்டம்
அடுத்த செய்தி நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 580 பேர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

கியூபெக் மாகாணத்தில் சென்ற வருடம் சிகிச்சை பெறாமலே வெளியேறிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

செப்டம்பர் 21, 2025
கியூபெக்

மத அடையாளத்தை நீக்கும் தீர்மானத்திற்கு வாக்களித்த நகர சபை அதிகாரிகள்

டிசம்பர் 2, 2025
கனடாமுதன்மை செய்தி

பொதுப் பாதுகாப்பிற்கு நிதியை ஒதுக்கியுள்ள விக்டோரியா நகரம்

ஜூலை 3, 2025
கனடாமுதன்மை செய்தி

விடுமுறைக்கால பயணங்களை மாற்றியமைக்கும் கனேடியர்கள் – காரணம் வெளியானது.

மார்ச் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?