Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

ஆங்கில மொழிப் பல்கலைக்கழகங்களுக்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையேயான புதிய ஒப்பந்தம்

ஜூன் 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத்தில் உள்ள முன்னணி ஆங்கில மொழிப் பல்கலைக்கழகங்களுக்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த மொழிக் கொள்கைசார் பதற்ற நிலைமைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, ஆங்கிலப் பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிமாகாண மற்றும் சர்வதேச மாணவர்கள் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக, மாகாண அரசு ஆண்டுதோறும் 20 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.

மொண்ட்ரியலில் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், கியூபெக்கின் உயர்கல்வித் துறை அமைச்சர் மார்ட்டின் பைரோன் (Martine Biron) மற்றும் ஆங்கிலப் பல்கலைக்கழகங்களின் தலைவர்கள் இந்த புதிய 8 ஆண்டுகாலப் பங்களிப்பு உடன்படிக்கையை (Eight-year deal) அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, மெக்கில் (McGill), கான்கோர்டியா (Concordia) மற்றும் பிஷப்ஸ் (Bishop’s) முதலான மூன்று முன்னணி ஆங்கிலப் பல்கலைக்கழகங்களுக்கு, அடுத்த 8 ஆண்டுகளுக்கு மாகாண அரசு ஆண்டுக்கு $20 மில்லியன் டொலர்கள் வரை நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளது.

இதற்கு ஈடாக, 2026 ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் முதலாண்டில் இணையும் வெளிமாகாண இளநிலை மாணவர்களில் குறைந்தது 60 சதவீதமானோர், தங்களின் பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் போது, பிரெஞ்சு மொழிப் புலமையைக் கொண்டிருப்பதை அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் உறுதி செய்ய வேண்டும் என, கியூபெக் மாகாண அரசு தெரிவித்துள்ளது.

அந்த பிரெஞ்சு மொழிப் புலமை ஆனது, கியூபெக்கின் மொழித் தகைமை அளவீட்டின்படி ‘நிலை 4’ மட்டத்தை எட்டி இருக்க வேண்டும் என, அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய இலக்கை அடைவதற்காக, அந்த மூன்று பல்கலைக்கழகங்களுக்கும் நான்கு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
அடுத்த செய்தி மொன்றியலின் முக்கிய வழித்தடங்களில் முடக்கப்பட்டுள்ள REM ரயில் சேவைகள் 

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

உயிரிழந்த ஏர் கனடா விமானிகளுக்கு மொன்றியலில் நிரந்தர நினைவுச் சின்னம் ஒன்று திறந்து வைப்பு

ஏப்ரல் 27, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் பிரதான குற்றவாளியான ஜீன் பிரான்சுவா மாலோ கைது

டிசம்பர் 31, 2025
கியூபெக்

முழுமையாக மூடப்படவுள்ள மொன்றியலின் நெடுஞ்சாலை 520

ஏப்ரல் 24, 2026
கியூபெக்முதன்மை செய்தி

மொன்றியல் பெல் சென்டருக்கு முன் வெடித்த போராட்டம்!

நவம்பர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?