கியூபெக் மாகாணத்தின் 12,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் முதலானோர், மொன்ட்ரியலில் உள்ள பெல் சென்டரில் நேற்று ஒன்று திரண்டனர்.
மருத்துவர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியைச் செயல்திறன் இலக்குகளுடன் இணைக்கும் Bill 2 மசோதாவை உடனடியாக நிறுத்தக் கோரி இந்த மாபெரும் பேரணி நடைபெற்றது.
மாகாணத்தின் நான்கு முக்கிய மருத்துவக் கூட்டமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த இந்தப் பேரணி, புதிய சட்டத்திற்கு எதிராக மருத்துவ சமூகம் தனது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தால் பாராளுமன்ற நடைமுறைகளைப் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், மருத்துவச் சேவையில், தரத்தை விட எண்ணிக்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும், பொது சுகாதார அமைப்பை அல்லது மாகாணத்தை விட்டு வெளியேறத் மருத்துவர்களைத் தூண்டுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட தினத்தில் இருந்து 550-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கியூபெக்கை விட்டு வெளியேற அல்லது முன்கூட்டியே ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
