Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
Uncategorizedஅண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் ஐந்து படுகொலைச் சம்பவங்களுடன் பிள்ளையானுக்கு தொடர்பு: சி.ஐ.டி விபரம் சமர்ப்பிப்பு

ஜூன் 15, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக, மட்டக்களப்பு பிராந்தியத்தில் அரங்கேறிய ஐந்து வெவ்வேறான படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான விபரங்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்), ராசிக் மொஹமட் ஃபைஸ் மற்றும் ஹமீத் லெப்பே மொஹட் ஆகியோரே இந்த புலனாய்வு விசாரணையில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற தொடர் படுகொலைகள் குறித்து முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே, மட்டக்களப்பு நீதவான் அண்ணாதுரை தர்ஷினி முன்னிலையில் இந்த விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள அறிக்கையின்படி, வெவ்வேறு இடங்களில் டி-56 ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட பல கொடிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து இந்த விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அதன்படி, கடந்த 2008ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி முருகன் கோவிலை ஒட்டியுள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இருவர் டி-56 துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் 2008 மே 22ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை ஆகிய சம்பவங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், வவுணதீவு காவல்துறை அதிகார எல்லைக்குட்பட்ட கொத்தியாபொல பகுதியில் வசித்துவந்த அழகதுரை தர்மலிங்கம் என்பவர், அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவொன்றினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விபரங்களையும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

இதனிடையே, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் உட்பட மனித கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவரையும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று திங்கட்கிழமை (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். அதன்போது அவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த 2025 ஏப்ரல் 7ம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி தம்புள்ளையில் பதற்றம்: இலங்கை வீரருக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே வாக்குவாதம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை.

மார்ச் 1, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்டம் – மாந்தை மேற்கு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

மே 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பட்டம் பறக்க தடை விதிக்கபட்டுள்ளது!

ஜூலை 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மணற்காடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மனிதவுரிமை ஆணைக்குழு

மார்ச் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?