கியூபெக் லிபரல் கட்சித் தலைவர் Charles Milliard, தனது கட்சியே மாகாணத்தில் உறுதியான “federalist” நிலைப்பாட்டை கொண்ட ஒரே விருப்பமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.ஷெர்ப்ரூக் நகரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் பேசிய அவர், Parti Québécois கட்சி கியூபெக் மக்களின் நிஜ நிலைமைகளை புரிந்து கொள்ளவில்லை என விமர்சித்தார்.
அதேவேளை, மாகாண அரசின் Coalition Avenir Québec (CAQ) கட்சிக்குள் சுயாட்சி விவகாரத்தில் தெளிவான நிலைப்பாடு இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அமைச்சர்களிடையே கூட கருத்து வேறுபாடு இருப்பது குறிப்பிடத்தக்கது. Labour அமைச்சர் Jean Boulet, சுயாட்சி வாக்கெடுப்பில் “இல்லை” என வாக்களிப்பேன் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் Culture அமைச்சர் Mathieu Lacombe, “ஆம்” என வாக்களிப்பேன் என கூறியிருப்பது அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
“இவ்வளவு முக்கியமான தேசிய விவகாரத்தில் ‘ஆம்’ மற்றும் ‘இல்லை’ இரண்டும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது” என்று Charles Milliard விமர்சித்தார். லிபரல் கட்சி கியூபெக்கை பிரிக்க விரும்பவில்லை, மாறாக மாகாணத்தை முன்னேற்ற விரும்புகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் தேர்தலில் கியூபெக் சுயாட்சி விவாதமே முக்கிய அரசியல் பிரச்சினையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
