கியூபெக்கில் வாகன விபத்தை ஏற்படுத்திய வாகனச்சாரதி, விபத்து நடந்த தருணத்தில் தனது கைத்தொலைபேசியில் இணையவழி விளையாட்டொன்றை (Online Game) விளையாடிக் கொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
மொன்றியலின் தெற்குக்கரை (South Shore) பகுதியான லாங்குயில் பிரதேச நீதிமன்றத்தில் இந்த ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான பல்ஜித் சிங் என்பவரே, லாங்குயில் நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக (Videoconference) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நெடுஞ்சாலையில் தாய் மற்றும் அவரது 11 வயது மகன் உட்பட இருவரின் உயிரிழப்புக்குக் காரணமான பாரிய வீதி விபத்தை ஏற்படுத்திய லொறியின் சாரதியான பல்ஜித் சிங்கிடமிருந்தே, இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விபத்து நடந்த சில மணிநேரங்களிலேயே கனடாவை விட்டுத் தப்பி, இந்தியா மற்றும் கலிபோர்னியா எனப் பல இடங்களில் தலைமறைவாக இருந்த பல்ஜித் சிங், மீது சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அந்த சர்வதேச பிடியாணை மூலம் பல ஆண்டுகளுக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டு தற்போது சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
