கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள இனுக்ஜுவாக் (Inukjuak) கிராமத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது காயமடைந்த 6 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரைபிள் துப்பாக்கியுடன் காவல்துறையை எதிர்த்த போது, முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே, இந்த சிறுமி காயமடைந்ததாக நம்பப்படுகின்றது.
10 நாட்களாக மொன்றியல் குழந்தைகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அச்சிறுமி அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர், உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சிறுமி எப்படி காயமடைந்தார் என்பது குறித்து கியூபெக் மாநிலத்தின் சுதந்திர விசாரணை அமைப்பு (BEI) விசாரணையைத் தொடங்கியுள்ளது


