அமெரிக்காவிலிருந்து கனடாவிற்கு சட்டவிரோதமான முறையில் 90 துப்பாக்கிகளை கடத்த முயன்ற வழக்கில் இரு கனடியர்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவைச் சேர்ந்த மாலிக் ப்ரோம்ஃபீல்ட், கனடா, அமெரிக்கா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் குடியுரிமை கொண்ட கமல் சல்மான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பைசன் அலி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இம்மூவரும் ஹாமில்டன் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி கடந்த மே 7-ம் தேதி, நியூயார்க் மாநிலத்தின் Interstate 90 (I-90) நெடுஞ்சாலை அருகே வெள்ளை நிற ‘ஃபோர்டு எக்ஸ்ப்ளோரர்’ வாகனம் போக்குவரத்து விதிகளை மீறியதாக போலீசாரால் நிறுத்தப்பட்டது.
இதன்போது நடத்தப்பட்ட விசாரணையில் ஒரு கனமான சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரும் அளவிலான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் திருடப்பட்ட 17 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
