நோர்வூட் நகரில் புதிய மதுபானசாலை திறக்கப்படவுள்ள நிலையில், இதனை எதிர்த்து அங்குள்ள பொதுமக்கள் கருப்பு கொடிகளை ஏந்தி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இதன்படி நோர்வூட் பகுதியில் மூன்று மதுபான சாலைகள் உள்ளதுடன் தற்போது புதிய மதுபான சாலையொன்றை திறக்கவுள்ளனர்.
போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அங்குள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தது.
திறக்கப்படவுள்ள மதுபாசாலை கட்டிடத்தின் மேல் தளத்தில் தனியார் வகுப்புக்கள் இடம்பெறுவதுடன், இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்படுவதுடன் , பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் எழுந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கைன்றனர்.
இந்த மதுபானசாலை திறப்பால் பொருளாதார மற்றும் சமூக பிரச்சினை ஏற்படும் என தெரிவிக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சியுடன் வினவப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
நோர்டன் பிரிட்ஜிலுள்ள ஒரு மதுபானசாலையை நோர்வூர்ட் நகருக்கு மாற்றுவதட்கு கலால் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், மக்கள் போராட்டம் மேற்க்கொண்டதால் இவ்விடயம் பற்றி பரிசீலனை செய்யப்படும் என தெரிவித்தார்.


